நடிகர் விவேக்கிற்கு நேற்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ கருவியின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதையடுத்து தமிழ் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்தது. விவேக் விரைவில் நலம் பெற வேண்டுமென பலர் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
காமெடி மூலமும் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொன்ன ஒரு நல்ல சிந்தனை கொண்ட கலைஞன் இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பலர் தெரிவித்து வருகின்றனர். விவேக் நேற்று முன்தினம் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. நேற்று மருத்துவமனையில் விவேக்கை பார்க்கச் சென்ற மன்சூர் அலி கானும் தடுப்பூசியால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.