கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து, வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் 12 பேர் உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது குன்னூர் அருகே வானில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்மை நிலையை அறியாமல் தேவையில்லாத வதந்திகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். வீண் யூகங்களை பரப்பி உயிரிழந்தவர்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடாது. விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழக காவல்துறை தரப்பில், விமான விபத்து குறித்து பொய்யான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.