சவுதி அரேபியாவில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வகை வைரஸ், கடந்த மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. 

தற்போது ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவிட்டது. இன்னமும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுவதுதான். 

ஒரு வார காலத்திற்குள் ஒமைக்ரான் வைரஸ் -20  நாடுகளில் கால் தடம் பதித்து, உலகை அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிய ஒமைக்ரான் கொரோனா மத்திய கிழக்கு நாட்டிலும் கால் பதித்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு  ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  முன்னதாக கடந்த வாரம் 7ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமானங்களுக்கு  சவுதி அரேபியா தடை விதித்து இருந்தது. 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்