இனி தமிழில்தான் ‘இனிஷியல்’ – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்கும்பொருட்டு இனிஷியல் அதாவது முன்னெழுத்தை தமிழில் தான் எழுத வேண்டுமென உத்தரவிட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46-இன் போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்”, என்று அறிவித்தார்.

திமுக அரசு தமிழ் மொழியைக் காக்கும்பொருட்டு இனிஷியல் அதாவது முன்னெழுத்தை தமிழில் தான் எழுத வேண்டுமென உத்தரவிட்டது. தற்போது அதற்கான அரசாணையும் வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், அரசின் அனைத்து நிறுவனங்கள், அங்கங்கள் என அரசு சம்பந்தமான அனைத்து இடங்களிலும் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை கொண்டுவர வேண்டும் என ஆணையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் அந்த ஆணையில், "பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்க வேண்டும். தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்கள் பொது மக்களின் பெயர்கள் குறிப்பிடும் போது முன்னெழுத்துகள்  தமிழிலே பதிவு செய்யப்பட வேண்டும். அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்