கொரோனா பரவல் காரணமாக: ஜன 26 நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து..

கொரோனா பரவல் காரணமாக  தமிழகத்தில்  வரும் 26ம் தேதி  நடைபெற இருந்த கிராம சபை கூட்டம்  ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில்  கொரோனா பரவல் மீண்டும்  தீவிரமடைந்து வருகிறது.  தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை  தாண்டி பதிவாகி வருகிறது. இரவு நேர ஊரடங்கு,  ஞாயிறு முழு ஊரடங்கு,  வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்ல தடை  போன்ற கட்டுப்பாடுகள்   அமலில் உள்ளன.  பொதுமக்கள்  கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது. 

அதன் ஒரு பகுதியாக  தற்போது,  நாளை மறுநாள்  குடியரசு தினத்தன்று நாடு முழுவதும்  நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.   கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது  குறித்து மாவட்ட ஆட்சியர்கள்  உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க  வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள  அறிவிப்பில்,   தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்    நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டியே  கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்