கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை மத்திய அரசு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வரை நீடித்துள்ளது.
தற்போது உலகில் உள்ள பல நாடுகளும் சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஏனென்றால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு வைரஸ்களும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மீண்டும் வேகமாக பரவுகிறது. அதிலும் குறிப்பாக இரண்டு முறை இந்திய அரசாங்கம் ஆபத்திற்குரிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 28 ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமான சேவைக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.