சவுதி அரேபியாவிற்கு பயணிகள் இனி வருகை தரும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சவுதி அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் தங்கள் வருகையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும் , தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீக்கபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மசூதிகளில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வந்த தொழுகை தற்போது இடைவெளியின்றி தொழுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் இனி நேரடி விமான சேவை தொடங்க அனுமதி சவுதி வழங்கியுள்ளது. மேலும் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும் பொதுமக்கள் மசூதிகளிலும் , உட்புறப் பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை ஆனால் ஷாப்பிங் மால்கள் , திரையரங்கம் போன்ற உட்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எந்த வகையான விசிட் விசாக்களில் பயணிகள் சவூதிக்கு வந்தாலும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்யும் மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும். சவுதி உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிகாரப்பூர்வ கட்டுப்பாடுகளின் தளர்வுகள் நேற்று மார்ச் 5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.