பேராவூரணி பேரூராட்சி தலைவராக சாந்தி சேகர் (திமுக) போட்டியின்றி தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுக்கான உறுப்பினர் தேர்தலில் 10 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றிபெற்றது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்ற மூன்று பேரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் 5 ஆவது வார்டில் வெற்றி பெற்ற  சாந்தி சேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என  தேர்தல் நடத்தும் அலுவலர் பா.பழனிவேல் அறிவித்தார். 

துணைத் தலைவர் 
மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் 2 ஆவது வார்டு வேட்பாளர் கி.ரெ.பழனிவேல் (திமுக) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் கூட்டத்திற்கு வரவில்லை. 

இதை போன்று தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சுந்தரத்தமிழ் (திமுக) போட்டியின்றி தேர்வுமா செய்யப்பட்டார். மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் சித்ரா  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதவதி சான்றிதழ் வழங்கினார். 

அப்போது, மாநில மீனவரணி துணைச் செயலாளர் ஜெய்பிரகாஷ், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ராஜரெத்தினம், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் பூவாளூர் ஞானப்பிரகாசம், கழனிவாசல் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் முத்துவேல், பட்டங்காடு மாரிமுத்து, இளைஞர் அணி முருகேசன், பூமிநாதன், காங்கிரஸ் கட்சி அய்யப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

செய்தி : முனைவர் 
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்