செந்தலையில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் ! புகைப்படங்கள்..

ஈகைத்திருநாள் ( நோன்பு பெருநாள் ) உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்கள் வளைகுடா நாடுகளில் நேற்றும் இந்தியாவில் இன்று கொண்டாடுகின்றனர்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் பண்டிகையில் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக, 2 ஆண்டுகளாக கூட்டுத் தொழுகை நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். 

செந்தலையில் ஈதுல் பித்ர் கூட்டுத் தொழுகையை முடித்த இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரி வருகின்றனர். மற்றும் நண்பர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதை சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் செந்தலைநியூஸ் டீம் சார்பாக மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்......
Eid Mubarak.... 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்