அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் பயணிகளும் ஏறிச்சென்று அமர்ந்தனர். மொத்தம் 98 பயணிகள் இந்த விமானத்தில் இருந்தனர். சரியாக நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த அந்த விமானம், டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது ரன்வேயில் இருந்து சறுக்கியது. விமானத்தின் ஒரு பக்க டயர் ரன்வேக்கு வெளியே இருந்த புல்வெளியில் சிக்கிக் கொண்டது. விமானத்தின் ஒருபக்க டயர் சேற்றில் சிக்கியாதால் சுதாரித்துக்கொண்ட விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.
இதனால் அந்தவிமானம் பெரிய விபத்துக்குள்ளாவதில் இருந்து தவிர்க்கப்பட்டது.விமானத்தில் இருந்து பயணிகளும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர். இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் விமானம் பாதுகாப்பாக நிறுத்தும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.