நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய்விருந்து விழாவில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பது அந்த விழாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய்விருந்து விழாக்கள் நடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் கலை இழந்து காணப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் கலைக்கட்ட தொடங்கியது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே பொது இடத்தில் மொய் விருந்து விழா வைத்துள்ளனர். இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய் வரையில் மொய் வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பருக்கு மட்டும் ரூ .2.50 கோடியும் , பரிமளம் என்பவருக்கு ரூ .1.50 கோடியும் , அந்த ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள சிங்காரவேல் என்பவருக்கு ரூ .1.10 கோடியும் மொய் வசூலாகியுள்ளது. மேலும் அந்த விழாதாரர்களில் 20 - க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா 50 லட்சம் ரூபாய் வரையில் மொய் வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது.
நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் நடைபெற்ற மொய் விருந்து விழாவில் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டுமே ரூ .2.50 கோடியும் மொத்தமாக ஒரே நாளில் ரூபாய் 15 கோடி வரையிலும் வசூலாகி இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.