கிருஷ்ணாஜிபட்டிணத்தில் TNTJ சார்பில் நடைபெற்ற ரத்த தானம் முகாம்

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணாஜிபட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு TNTJ மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் மா்க்கசில் நடத்தினர்.

இந்த முகாமிற்கு மாவட்டத் துணைத் தலைவா் முகம்மது மீரான் தலைமை வகித்தாா். இதில் கிளைத் தலைவா் நைனாமுகம்மது, செயலா் சைபுல்கரீம்,
பொருளாளா் சல்மான்கான், துணைத் தலைவா் முகைதீன் அப்துல்காதா், துணைச் செயலா் மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ரத்த தான முகாமில் மொத்தம் 32 போ் ரத்ததானம் செய்தனா். ரத்தம் கொடுத்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை டாக்டா் ராதா கிருஷ்ணன் வழங்கினாா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்