மரண அறிவிப்பு { கச்சி மரைக்கான் அவர்கள் }


செந்தலைப்பட்டினம் தெற்குத்தெருவை சார்ந்த மர்ஹூம் சாலிபு அவர்களின் மகனும் மர்ஹூம் அம்பலம் ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரரும் H.ஹைதர் அலி, H. நாகூர்பிச்சை இவர்களின் சிறிய தகப்பனார் கச்சி மரைக்கான் அவர்கள் அதிராம்பட்டினத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9:30 மணிக்கு அதிராம்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக....

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ' கீராத் ' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ' கீராத் ' அளவு நன்மையும் கிடைக்கும் . அதற்கு இரண்டு ' கீராத் ' என்றால் என்ன என வினவப்பட்டது . அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும் ' நபிகளார் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி , முஸ்லிம்.

நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் ; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே ! அல் குர் ஆன் : 4 : 78

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்