வெளியூர் மரண அறிவிப்பு : கட்டுமாவடி { அலிமா அம்மாள் அவா்கள்}

கட்டுமாவடி பாதுஷா ஹோட்டல் இக்பால் அவர்களின் தாயார் செந்தலையை சேர்ந்த பாருக் மற்றும் மர்ஹூம் ஜமால் இவர்களின் சகோதரியும் மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மனைவி அலிமா அம்மாள் அவா்கள் 
வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக....

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ' கீராத் ' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ' கீராத் ' அளவு நன்மையும் கிடைக்கும் . அதற்கு இரண்டு ' கீராத் ' என்றால் என்ன என வினவப்பட்டது . அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும் ' நபிகளார் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி , முஸ்லிம். 

நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் ; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே ! அல் குர் ஆன் : 4 : 78
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்