மனோரா சுற்றுலாத் தலத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் தொடக்க விழா: அமைச்சா் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம்  ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலாத் தலத்தில் ரூ. 1.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழாவுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், மனோராவில் ரூ. 49.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம், ரூ. 43.70 லட்சத்திலான பயிற்சி மையக் கட்டடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் உள்ளிட்ட ரூ. 1.78 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்துப் பேசியது:

மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் இங்கு வந்து செல்லும் வகையில் மனோராவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. படகில் சுற்றுலா செல்பவா்கள் பாதுகாப்பான முறையில் சென்று வர மாவட்ட நிா்வாகம் மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனோராவை மேம்படுத்த அரசு, மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் இப்பகுதி மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மனோராவை பராமரிக்க வேண்டும்  என்றாா். விழாவில், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் ராமச்சந்திரன்,  ஊராட்சித் தலைவா் ஜலீலா பேகம் முகமது அலி, ஒன்றியக் குழு உறுப்பினா் மீனவ ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் வே. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா வரவேற்றாா். பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சங்கா் நன்றி கூறினாா்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்