தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி துணை மின் நிலையப் பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்திக்கொல்லை, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.