இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பராரிக்க பொதுமக்களுக்கு அறிவிப்பு

சேதுபாவாசத்திரம் முதல் ECR சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகனங்களில் செல்லும் மக்களுக்கு அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றது. 

செந்தலையில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு செந்தலை  ஐமாத்தார்கள் மற்றும் ஊராட்சி மன்றம் மற்றும் காவல் ஆய்வாளர் இவர்கள் மூலமாக அறிவிப்பு பதாகை ஊரின் மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பொதுமக்கள் நலன் கருதி அறிவிப்பு

ECR சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் மக்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதால் ஐமாத்தார்கள் & ஊராட்சி மன்றம் மற்றும் காவல் ஆய்வாளர் இவர்கள் மூலமாக பொதுநலன் கருதி தங்களது மாடுகளை சாலையில் சுற்றித்திரிய விடாமல் வீட்டிலயே பராமரிப்பு செய்வதோடு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
காவல் ஆய்வாளர் ஜமாத்தார்கள்.

 இவ்வாறு அதில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை விரைவில் காணலாம்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்