தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 4 ஆம் தேதி வரை படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும்.
அக்டோபரில் பெய்த மழை அளவானது 15 சென்டிமீட்டர் என்று பதிவாகி உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை 45% இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழை என்பது தமிழகத்துக்கு மட்டும் என்பது கிடையாது கேரளா, கர்நாடகா என்று அனைத்தும் சேர்ந்து தான். தமிழக பகுதியை பொறுத்த வரை இயல்பை எதிர்பார்க்கலாம் என்றார். படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.