சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சியில் ரூ. 1.89 கோடியில் கூடுதல் மின்மாற்றியை சென்னையிலிருந்து முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
குருவிக்கரம்பை, நாட்டாணிக்கோட்டை துணை மின் நிலைநிலையங்கள் மூலம் மின்வசதி பெறும் கழனிவாசல், உடையநாடு, வாத்தலைக்காடு, ஆதனூா், பேராவூரணி நகா் உள்ளிட்ட பகுதி மக்கள் தடையில்லாத மின்சார வசதி பெறும் வகையில் நாடியத்தில் ஏற்கெனவே இருந்த இரண்டு மின்மாற்றிகளுடன் கூடுதலாக 110/33 கேவிஏ, 16 எம்விஏ திறனுடைய ரூ. 1.89 கோடி மதிப்பிலான மின்மாற்றியை முதல்வா் ஸ்டாலின் காணொலியில் தொடக்கி வைத்தாா்.
நாடியத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், உதவி செயற்பொறியாளா் எஸ். கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளா் அருண்டேல் மற்றும் நாடியம் பிரிவு பணியாளா்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.