அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் போன்ற தஞ்சை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை



தஞ்சை கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடலோர பாதுகாப்பை உறுதி வகையில் ஆண்டு தோறும் சிவிஜில்(Sea vigil) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை துவங்கி நாளை மாலை வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும்வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதில் இந்திய கடலோர காவல் படை, மத்திய சுங்கத்துறை மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படையினர் இணைந்து கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு போதியாக தஞ்சை மாவட்டம் கடல் பகுதியில் அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் கட்டுமாவடி வரை கடல் பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது மல்லிப்பட்டினம் மனோராவில் சோதனையில் ஈடுபட்ட வீடியோ...



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்