சாலை பாதுகாப்பு வார விழா: பட்டுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணி

பட்டுக்கோட்டையில் தூய்மை வார விழா, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தூய்மை வார விழா, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் மணிகண்டன், இருசக்கர வாகன முகவர்களிடம் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கும்போதே வாகன ஓட்டிகளுக்கு முறையாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் ஜோதிலிங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்