மல்லிப்பட்டினத்தில் முதலமைச்சர் கோப்பை மண்டல அளவில் விளையாட்டு போட்டி- MLA அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை திருச்சி மண்டல அளவில் கடற்கரை கையுந்து பந்து விளையாட்டு போட்டி 2022-2023 நேற்று மல்லிப்பட்டினம் (மனோரா) கடற்கரையில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில்  சேதுபாவசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல்மஜுத், விளையாட்டுத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் N.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்