UPI உடன் இணைகிறது சிங்கப்பூர் PAY Now - இந்தியாவிற்கு இனி எளிதில் பணம் அனுப்பலாம்!

சிங்கப்பூர் இந்தியா இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை இன்று முதல் துவங்க இருக்கிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை ( UPI ) மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றின் இணைப்பு சேவைகள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான துவக்கத்தினை சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர்.

உலக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. அதாவது ரொக்கம் இல்லா பண பரிமாற்ற சேவையை அதிகம் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது, சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோருக்கு இச்சேவை பணப்பரிமாற்றத்திற்கு உதவிகரமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் PAY NOW பண பரிவர்த்தனை தளத்துடன் இந்தியாவின் UPI இணைவதால் இந்தியாவிற்கான பண பரிமாற்றம் இனி மிக எளிதில் நடைபெறும். இதனால் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்