புதுக்கோட்டையில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் இடத்தை பிடித்த செந்தலை மெளலான ஆஷிக்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் IPAA Men's Thanjavur Divisional Athletic Meet - எனற விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் பல பகுதியிலிருந்தும் கல்லூரி சார்பில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டியில் மனோரா பாலிடெக்னிக்
கல்லூரியின் சார்பில் கலந்துகொண்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் மகன் மெளலான ஆஷிக் கலந்து கொண்டு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் இடத்தையும் 10000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மெளலான ஆஷிக்கிற்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நமது ஊர் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் மெளலான ஆஷிக்கிற்கு செந்தலை நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்..

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்