பட்டுக்கோட்டை உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி பயன்பாட்டினை அகற்றி துணியாலான மஞ்ச பையினை பயன்படுத்திடும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்னும் தானியங்கி இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சித்தலைவர் நெகிழி இல்லா தமிழகம் குறித்து கலந்துரையாடினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.