தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம் !!

தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள கிராம ஊராட்சிகளில், மார்ச் 22ஆம் தேதி புதன்கிழமை உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  
"மார்ச். 22 புதன்கிழமை உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.  
இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே, இந்த கிராம சபை கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்