செந்தலையில் பொதுநல சங்கம் சார்பாக 150 குடும்பங்களுக்கு ஃபித்ரா வழங்கல்

செந்தலைப்பட்டினத்தில் பொதுநல சங்கம் சார்பாக 150 குடும்பங்களுக்கு இந்த வருடத்திற்க்கான ஃபித்ரா வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பொதுநல சங்கம்,
சமூக சேவை மற்றும் ஊர் மக்களுக்கு தேவையான பல பொது சேவைகளில் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவை முதல் ஊருக்கு தேவையான அடிப்படை தேவை, மருத்துவ உதவி, திருமண உதவி, சமூக விழிப்புணர்வு போன்ற பல சேவைகளை இதுவரை எந்த தடையும் இல்லாமல் பொதுநல சங்கம் செய்து வருகிறது.

ரமலான் மாத வணக்கங்களில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். பிற காலங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமாக தர்மம் செய்ய நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிந்து, அறுசுவை உணவருந்தி, மகிழ்வை பகிர்ந்து கொள்வதில் ஏழை, பணக்காரர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காணாமல், இஸ்லாமிய சகோதரத்துவம் நிலைநாட்டப்படவேண்டும்! என்ற உயர்ந்த நோக்கத்தில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையான தர்மமாக்கியுள்ளார்கள்.

பொது நல சங்கம் தொடர்ச்சியாக கடந்த 9 வருடங்களாக நோன்பு காலங்களில் கடமையாக்கப்பட்ட ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் பொருட்களை வருடா வருடம் இடைவிடாமல் வழங்கி வருகின்றது. இந்த வருடமும் அதற்கான தொகை நிர்வாகத்தின் சார்பாக வசூல் செய்யப்பட்டு நேற்று சுமார் 150 உள்ளூர் சில வெளியூர் ஏழை எழிய மக்களுக்கு  ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்ட பொருள்கள் !! 

* 10 KG அரிசி
* சிக்கன் 1KG
* 100 ரூபாய் ( ரொக்க பணம் )

நன்றி அறிவிப்பு.
நம்பிக்கையுடன் ஃபித்ரா தொகையை ஃபித்ராவிற்கு மட்டும் பயன்படுத்தும் பொதுநல சங்கத்திற்கு உங்கள் ஃபித்ரா தொகையை எங்களிடம் வழங்கிய உறவுகள் அனைவருக்கும் பொதுநல சங்கம் சார்பாக நன்றியையும் சலாத்தையும் தொரிவித்துக்கொள்கிறோம்...... என பொதுநல சங்கம் தனது முகநூல் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்