அதிராம்பட்டினம் நகராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது. இதுதவிர தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் மீனவர்கள் வாழும் பகுதியாகவும், மையமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடற்கரையையொட்டி பல கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் ஏராளமான மீனவர்கள் கூரை வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் காற்று இயல்பை விட கூடுதலாகவே வீசும். ஏதோ சில காரணங்களால் தீ பற்றும் போது காற்றின் வேகத்தால் விரைவில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.
இப்படி இருக்கையில் தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கும் போது 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையிலிருந்து தான் தீயணைப்புவீரர்கள் வர வேண்டும். அப்படி வரும் போது பல்வேறு போக்குவரத்து இடையூறுகளை கடந்து வருவதற்குள் தீ முற்றிலுமாக பரவி பெரும் சேதம் ஏற்படுகிறது.
எனவே தீ விபத்துகளை தடுக்கும் வகையில் அதிராம்பட்டினம் நகராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.