தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அல் அன்சார் ஜூம் ஆ பள்ளிவாசல் இணைந்து சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இஸ்லாமியர்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அல் அன்சார் ஜூம் ஆ பள்ளிவாசல் இணைந்து 11-ஆம் ஆண்டு சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மற்றும் அருள்தந்தை ஜேக்கப் ஜெயசீலன், தஞ்சை பெரிய கோவில் குருக்கள் தஞ்சை மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி ஹாஜா மைதீன் மிஸ்பாகி, மகாராஜா சில்க்ஸ் முகமது ரபி காதர் மொய்தின் கல்லூரி பேராசிரியர் அகமது கபீர் கும்பகோணம் இஸ்லாமிய பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்