நாம் அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவதற்கு மட்டுமே பெட்ரோல் பம்ப் செல்வோம். காரில் எரிபொருள் நிரப்புவதைத் தவிர, வாகனத்தின் டயர்களில் இலவச காற்றும் நிரப்பப்படுவது வாடிக்கை. ஆனால் பெட்ரோல் பம்பில் சில இலவச வசதிகளும் கண்டிப்பாககிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வசதிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவை வழங்கப்படுகின்றன.
எந்தவொரு பெட்ரோல் பம்புக்கும் உரிமம் வழங்குவதற்கு முன் அரசு விதிப்படி இந்த 6 இலவச வசதியை இலவசமாக கொடுத்தால்மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும்.இந்த வசதிகள் பற்றிய தகவல்களை பம்ப் ஊழியரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம், மேலும் இந்த வசதிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அங்குள்ள புகார் புத்தகத்தில் உங்கள் கருத்தையும் எழுதலாம். அதன் பிறகு பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பெட்ரோல் பம்பில் நீங்கள் பெறக்கூடிய இலவச வசதிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
* இலவச காற்று:
எந்த பெட்ரோல் பம்பிலும் எரிபொருளை நிரப்பினால், கட்டணம் ஏதுமின்றி உங்கள் காரின் டயர்களில் காற்றை நிரப்பும் வசதி கிடைக்கும். பம்ப் சார்பில் இந்த வசதி செய்து தருவதும், அதற்கான பணியாளரை நியமிக்க வேண்டியதும் கட்டாயம்.
* சுத்தமான குடிநீர்:
பெட்ரோல் பம்பில் சுத்தமான குடிநீர் அமைப்பு இருப்பதும் அவசியம். பம்பிற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சுத்தமான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்பது ரூல்ஸ்
* கழிப்பறை வசதி:
பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது கட்டாயம். இதில் பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருக்க வேண்டும். பெட்ரோல் பம்பில் உள்ள கழிப்பறை வசதியை எரிபொருள் வாங்காமல் கூட பயன்படுத்தலாம். இந்த கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் பொறுப்பு.
* தொலைபேசி வசதி:
பெட்ரோல் பங்கில் இலவச தொலைபேசி அழைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அவசரம் என்றால் அருகில் உள்ள பெட்ரோல்பங்க் சென்று அவசர உதவியை நாடலாம்.
* முதலுதவி பெட்டி:
பெட்ரோல் பம்பில் முதலுதவி பெட்டி அவசியம். இதில் அனைத்து அடிப்படை மருந்துகளும் வைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட்டால், பெட்ரோல் பம்பிலேயே முதலுதவி வசதி கிடைக்கும்.
* தீயை அணைக்கும் கருவி:
பெட்ரோல் பம்புகளில் நீங்கள் எப்போதும் தீயை அணைக்கும் கருவிகளைக் காணலாம். இவை பம்ப் தேவைக்கானது மட்டுமல்ல. பங்க் அருகில் அல்லது சாலையில் ஏதேனும் தீ விபத்து என்றாலும், தீயை அணைக்க வேண்டி பெட்ரோல் பம்பிலிருந்து தீயணைப்பு கருவியை எடுக்கலாம். இதற்கு பெட்ரோல் பம்பில் யாரும் மறுக்க முடியாது. மாறாக, தீயை அணைக்கும் கருவியை இயக்குவதற்கு தங்கள் ஊழியர்களில் ஒருவரை அனுப்ப வேண்டும்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.