பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலியின் ஒலிபரப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகனுக்கு சமூக ஆர்வலர் விவேகானந்தம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வ. விவேகானந்தம் அனுப்பிய மனுவில்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட பகுதிகளில் விவசாயிகள், மீனவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, பண்பலை வானொலிகளின் ஒலிபரப்பு நிலையத்தை பட்டுக்கோட்டையில் அமைத்து தர வேண்டுகிறோம்.
திருச்சி, கொடைக்கானல், காரைக்கால் வானொலி நிலையங்களின் பண்பலை ஒலிபரப்பு பல பகுதிகளில் தெளிவாகக் கேட்பதில்லை. எனவே பட்டுக்கோட்டை பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் முத்துப்பேட்டை போன்ற கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பயன் பெறும் வகையில் பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலி
ஒலிபரப்பு நிலையத்தை அமைத்துத் தர வேண்டும். எனக் கூறியுள்ளார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.