அதிராம்பட்டினத்தில் உள்ள இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தைக் கைப்பற்றும் முடிவைத் நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாக இமாம் ஷாஃபி பள்ளி கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பள்ளியை மூட வேண்டும் என நகராட்சி நிா்வாகம் முத்திரையிட்டுள்ளது. இமாம் ஷாஃபி பள்ளி தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அந்தக் கல்வி நிலையத்தின் பெயா்ப் பலகை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தை கைப்பற்றும் முடிவை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.