தமிழகத்தில் மக்களின் வசதிக்காகவும், பயன் பாட்டுக்காகவும், மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில் மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க கியூஆர் குறியீடு வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின்வாரியத்தில் ஏற்கனவே இணையதளத்தில் மொபைல் எண்களைப் புதுப்பிப்பதற்கான வசதி உள்ளது, தற்போது கியூஆர் குறியீடு நுகர்வோருக்கு இதை இன்னும் எளிதாக்கும். கியூஆர் குறியீடு அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இருக்கும், அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய வீட்டிற்கு குடிபெயரும் வாடகைதாரர்களுக்கும், முந்தைய உரிமையாளர்களின் எண்ணை மாற்றி பயன்படுத்திய வீடுகளை வாங்குபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களை குறிப்பிடும் வசதி இருக்கும். இந்த வசதி மூலம் நுகர்வோர் தங்கள் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கலாம், நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்பட்ட கூடுதல் மொபைல் எண்களைச் சரிபார்க்கலாம் மற்றும் தேவையற்ற மொபைல் எண்களை நீக்கலாம். புது இணைப்பு, புகார், கட்டணம் உள்ளிட்ட வசதிகள் பெறவும் கியூஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.