வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி காரில் கொண்டு சென்ற  2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காவல் ஆய்வாளர் முருகேசன், காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது அதில் 5 வெளிநாட்டு பறவைகள் இருந்தன. இதுபற்றி காரில் இருந்தவர்களிடம் கேட்டபோது, அவர்கள் உடனடியாக காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். இதையடுத்து காவலர்கள் தங்களுடைய காரில் அவர்களை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அதிராம்பட்டினம்
தாஜுதீன் (வயது38), வண்டிப்பேட்டை சதாம்உசன் (33) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வெளிநாட்டு பறவைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை வன அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதுபற்றி வனத்துறை அதி காரிகள் கூறுகையில், 'அதிராம்பட்டினத்தையொட்டி உள்ள அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டையாடும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்