ஐந்து மாவட்டங்களுக்கான தப்லீக் ஜமாஅத் சார்பில் மாபெரும் இஜ்திமா இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சம்பைபட்டிணத்தில் பிப்: 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்கான பணிகள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது.
இதற்காக சம்பைபட்டிணத்தில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் தொழுகும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. கரூரை சேர்ந்த பந்தலமைக்கும் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது, வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனி பரப்பளவில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவ முகாம் வசதி, ஒழுசெய்ய வசதி, குடிநீர் வசதி, உணவு, கழிவறை, ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இஜ்திமா வரும் 7 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு துஆவுடன் இஜ்திமா தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு நாட்கள் இஜ்திமாவில் டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மற்றும் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்த உள்ளார்கள் பின்பு 8 ஆம் தேதி இஷா தொழுகையுடன் இஜிதிமா நிறைவுபெறுகின்றது.
இஜிதிமா நடைபெறும் இடம் Google Map - லிங் கொடுக்கப்பட்டுள்ளது.
மௌலானா ஹாபிழ்
M. முஹம்மது முஸ்தபா அன்வாரி
இமாம் ஜூம்ஆ பள்ளிவாசல்
உடையநாடு
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.