செந்தலையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட தியாகத்திருநாள்.!


தமிழகம் முழுவதும் இன்று ஜுன் 17 தியாகத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று இந்தியா மற்றும் மலேசியா போன்ற ஒரு சில வெளிநாடுகளிலும் இன்று தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய இறைத்தூதர்களில் முக்கியமானவர்களின் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம் நபி இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக தியாகத்திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

செந்தலையில்  இளைஞர்கள், சகோதர, சகோதரிகள், குழந்தைகள் என அனைவரும் இன்று புத்தாடை அணிந்து ஏராளமானோர் அல் அக்சா ஜும்ஆ பள்ளிவாசலில் தியாகத்திருநாள் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடிவருகின்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.


வெளிநாடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்