வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களாலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். விவசாயத்தை போற்றும் அறுவடை திருநாளாம் பொங்கல் தினம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் உற்சாகம் பொங்க கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் பொங்கல் விழா வழக்கம் போலவே இந்த ஆண்டும் களை கட்டி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகளை அலங்கரித்து, தை மகளை வரவேற்று தமிழர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் சாதி, மத, பொருளாதார பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது இன்றுவரை பொங்கல் பண்டிகைதான். தமிழகத்தில் ஒரு போகம், இருபோகம், முப்போகம் என அறுவடை செய்யும் நிலப்பகுதிகள் உள்ளன, ஒரு மாவட்டத்திற்குள்ளேயே இந்த நிலப்பகுதிகள் மாறுபடும். அதனால் பொதுவாக தை மாத அறுவடையை அறுவடை திருநாளாக கொண்டாடியுள்ளனர்.

இந்த பொங்கல் நம்முடைய வாழ்விலும் புதிய விடியலை ஏற்படுத்தும் அதனால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என சொல்லப்படுகிறது. இந்த தைத் திருநாளான பொங்கல் பண்டிகை நம் அனைவருடைய வாழ்விலும் புதிய மாற்றத்தையும், ஏற்றத்தையும், அனைத்து விதமான வளங்களையும் பொங்கி பெருக செய்ய வேண்டும் என அனைவருடனும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துக்களுடன் செந்தலைநியூஸ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்